Site icon Tamil News

மே தினக் கூட்டம் : ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுன வெளியிட்ட அறிவிப்பு!

ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுன இந்த வருடம் கொழும்பு கெம்பல் மைதானத்தில் மே தினக் கூட்டத்தை நடத்தவுள்ளதாக பாராளுமன்ற உறுப்பினர் மஹிந்தானந்த அளுத்கமகே தெரிவித்துள்ளார்.

இன்று (26.03) இடம்பெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் அவர் இதனைத் தெரிவித்தார்.

எதிர்காலத்தில் பொதுத் தேர்தலா அல்லது ஜனாதிபதித் தேர்தலா என்பதைத் தீர்மானிக்க முடியாது எனவும், அதனை அரசாங்கம் அல்லது தேர்தல்கள் ஆணைக்குழுவே தீர்மானிக்க வேண்டும் எனவும் அவர் மேலும் தெரிவித்தார்.

ஆனால் ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுன எந்த தேர்தலுக்கும் தயாராக இருப்பதாக திரு அளுத்கமகே தெரிவித்தார்.

Exit mobile version