Site icon Tamil News

உலக அளவில் பேசப்படும் மதிஷவின் பிடியெடுப்பு

ஐபிஎல் போட்டியில் நேற்று நடைபெற்ற ஆட்டத்தில் இலங்கை அணியின் வீரர் மத்திஷ பத்திரன  பிடித்த கேட்ச் குறித்து உலகம் முழுவதும் சிறப்புப் பேசப்பட்டு வருகிறது.

அவுஸ்திரேலியாவின் பலம் வாய்ந்த தாக்குதல் துடுப்பாட்ட வீரரான டேவிட் வார்னர் அடித்தப் பந்தை, மத்திஷ பத்திரன லாவகமாக பிடித்திருந்தார்.

அவரின் பிடியெடுப்பு பலராலும் பாராட்டப்பட்டு வருகின்றது. டேவிட் வார்னர் 35 பந்துகளில் 52  ஓட்டங்களை எடுத்திருந்த போது ஆட்டமிழந்தார்.

பந்து வீச்சிலும் திறமையை வெளிப்படுத்திய பத்திரன தனது அபார பந்துவீச்சு மூலம் 33 ஓட்டங்களுக்கு 3 விக்கெட்டுகளை கைப்பற்றினார்.

Exit mobile version