Site icon Tamil News

மருத்துவச்சிகள் பற்றாக்குறையால் தாய் மற்றும் குழந்தை சுகாதார சேவைகள் ஆபத்தில்?

குடும்ப சுகாதார சேவை உத்தியோகத்தர்களுக்கு நிலவும் பற்றாக்குறையின் விளைவாக நாட்டில் தாய் மற்றும் குழந்தை சுகாதார சேவை வீழ்ச்சியடையும் அபாயம் ஏற்பட்டுள்ளதாக அரசாங்க குடும்ப சுகாதார சேவைகள் சங்கம் வலியுறுத்தியுள்ளது.

நாட்டில் சுமார் 3,000 மருத்துவச்சிகள் பற்றாக்குறை இருப்பதாக மருத்துவச்சிகள் சங்கத்தின் தலைவர் தேவிகா கொடித்துவக்கு தெரிவித்துள்ளார்.

மேலும், இவ்விடயம் தொடர்பில் உரிய அதிகாரிகளுக்கு அறிவிக்கப்பட்ட போதிலும் இதுவரையில் எந்தவொரு தீர்வும் வழங்கப்படவில்லை எனவும் அவர் குற்றம் சுமத்தியுள்ளார்.

“இந்தப் பற்றாக்குறை தொடருமானால், குடும்பச் சுகாதாரச் சேவையில் உள்ள வெற்றிடங்கள் தொடர்ந்து அதிகரித்து, ஆட்சேர்ப்புச் செயன்முறைகள் நடைபெறாவிடில், இந்த நாட்டில் தாய் மற்றும் குழந்தைகளின் ஆரோக்கியம் வீழ்ச்சியடையும்”, என கொடித்துவக்கு சுட்டிக்காட்டியுள்ளார்.

மருத்துவச்சிகளை விரைவில் சேவையில் சேர்த்துக் கொள்வது சுகாதார அமைச்சரின் பொறுப்பாகும் என்றும் அவர் தெரிவித்துள்ளார்.

Exit mobile version