Site icon Tamil News

மெக்சிகோவில் பாரிய விபத்து : 10 பேர் உயிரிழப்பு!

வடக்கு-மத்திய மெக்சிகோவில் பயணிகளை ஏற்றிச் சென்ற டிராக்டர்-டிரெய்லர் மற்றும் பிக்-அப் டிரக் இடையே ஏற்பட்ட விபத்தில் குறைந்தது 10 பேர் உயிரிழந்ததாக அதிகாரிகள் தெரிவித்தனர்.

பாதுகாப்பு மற்றும் குடிமக்கள் பாதுகாப்பிற்கான செயலகம் வெளியிட்டுள்ள தகவலின் அடிப்படையில், மெக்சிகோ நகரின் வடமேற்கில் உள்ள San Luis Potosí மாநிலத்தில் இந்த விபத்து நிகழ்ந்துள்ளது.

இறந்தவர்களில் ஐந்து பெண்கள், நான்கு சிறார்கள் மற்றும் ஒரு ஆண் உள்ளடங்குவதாக அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

தீர்மானிக்கப்படாத எண்ணிக்கையில் காயமடைந்தவர்கள் அருகிலுள்ள கிளினிக்குகளுக்கு அழைத்துச் செல்லப்பட்டதாக செயலகம் தெரிவித்துள்ளது.

விபத்துக்கான காரணம் தொடர்பில் விசாரணைகள் முன்னெடுக்கப்பட்டு வருவதாக அறிவிக்கப்பட்டுள்ளது.

Exit mobile version