Site icon Tamil News

கொழும்பில் நடந்த படுகொலை – கொலையாளிகள் குறித்து வௌியான தகவல்

இன்று (23) அதிகாலை கொழும்பு, வார்ட் பிளேஸில் நிறுத்தி வைக்கப்பட்டிருந்த முச்சக்கரவண்டியில் கூரிய ஆயுதங்களால் தாக்கப்பட்டு கொல்லப்பட்ட நபரின் சடலத்தை பொலிஸார் கண்டு பிடித்தனர்.

119 பொலிஸ் அவசர இலக்கத்திற்கு கிடைத்த தகவல் ஒன்றிற்கு அமைய சடலம் கண்டுபிடிக்கப்பட்டது.

விசாரணைகளின் போது மற்றுமொரு முச்சக்கரவண்டியில் வந்த இருவரே இக்கொலையை செய்துவிட்டு தப்பிச் சென்றுள்ளதாக தெரியவந்துள்ளது.

 

முகப்பு

 

இலங்கை

 

உலகம்

 

இந்தியா

 

சினிமா

 

தொழில்நுட்பம்

 

விளையாட்டு

 

பொழுதுபோக்கு

 

ஜோதிடம்

 

Lifestyle

கொழும்பில் பெரும் பரபரப்பை ஏற்படுத்திய இளைஞரின் மரணம்: விசாரணையில் வெளியான தகவல்கள்

Sri Lanka

.

7 hours ago

 

 

Oruvan

 

கொழும்பு – வார்ட் ப்ளேசில் சடலமாக மீட்கப்பட்டவர் கொடகாவெல பகுதியை சேர்ந்த சமிந்த குமார என பொலிஸார் அடையாளப்படுத்தியுள்ளனர்.

 

கொழும்பு, வார்ட் பிளேஸில் நிறுத்தப்பட்டிருந்த முச்சக்கரவண்டிக்குள் கூரிய ஆயுதங்களால் குத்திக்கொலை செய்யப்பட்ட நபரின் சடலம் இன்று காலை மீட்கப்பட்டிருந்தது.

இதன்படி, பொலிஸார் மேற்கொண்ட மேலதிக விசாரணைகளில், படுகொலை செய்யப்பட்டவர் கொடகாவெல பிரதேசத்தைச் சேர்ந்த 33 வயதான சமிந்த குமார எனத் தெரியவந்துள்ளது.

பகலில் அலுமினியம் தொடர்பான வேலைகளில் ஈடுபட்டு வந்த அவர் இரவில் வாடகை வண்டி ஓட்டுநராக செயற்பட்டு வந்ததாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

அவர் அதுருகிரிய பிரதேசத்தில் வாடகை வீட்டில் தங்கியிருந்ததாகவும் பொலிஸார் குறிப்பிட்டுள்ளனர்.

கூரிய ஆயுதங்களால் தாக்கப்பட்டதில் கொலைசெய்யப்பட்ட இளைஞரின் மார்பிலும் கழுத்திலும் இரண்டு காயங்கள் இருப்பதாக பொலிஸார் தெரிவிக்கின்றனர்.

மேலும், பின் இருக்கைக்கு அருகில் அவரது சடலம் கிடப்பதும் பொலிஸாருக்கு சந்தேகத்தை ஏற்படுத்தியுள்ளது.

முச்சக்கரவண்டியின் பக்கவாட்டு கண்ணாடி ஒன்று உடைந்து வீதியில் விழுந்துள்ளது.

எனினும் கொலைக்கான காரணம் இதுவரையில் வெளியாகவில்லை. இதன்படி, அப்பகுதியில் உள்ள பாதுகாப்பு கெமராக்களை பொலிஸார் சோதனை செய்து வருகின்றர்.

Exit mobile version