Site icon Tamil News

உக்ரைனில் சரமாரியாக ரஷ்யா ஆளில்லா விமான தாக்குதல் : மின்சாரம் இன்றி தவிக்கும் மக்கள்

ரஷ்ய தாக்குதலில் பயன்படுத்தப்பட்ட 22 ஷாஹித் ட்ரோன்களில் 21 ஐ உக்ரைன் ஒரே இரவில் சுட்டு வீழ்த்தியதாக அதன் விமானப்படை தெரிவித்துள்ளது.

உக்ரைனின் வடக்கு மற்றும் மத்திய உக்ரைனில் உள்ள ஆறு பிராந்தியங்களில் உக்ரேனிய வான் பாதுகாப்பு ட்ரோன்களை சுட்டு வீழ்த்தியதாக விமானப்படை தெரிவித்துள்ளது.

செர்னிஹிவின் வடக்குப் பகுதியின் ஆளுநர், ட்ரோன்களில் ஒன்று தனது பிராந்தியத்தில் உள்ள ஒரு வசதியைத் தாக்கியதாகவும் காலை வரை இப்பகுதியில் 5,000 க்கும் மேற்பட்ட நுகர்வோர் மின்சாரம் இல்லாமல் இருப்பதாக அவர் தனது அறிக்கையில் கூறியுள்ளார்.

Exit mobile version