Tamil News

விஜயின் தந்தையாக நடித்த பிரபல வில்லனுக்கு திருமணம்!! எனக்கு 60.. உனக்கு 50..!

தமிழ் சினிமாவில் பல படங்களில் வில்லனாக நடித்து புகழ் பெற்ற ஆஷிஷ் வித்யார்த்தி திருமணம் முடித்த விடயம் தான் தற்போது சினிமா வட்டாரத்தில் பரபரப்பாக பேசப்படுகின்றது.

1990-களில் இருந்து ஹிந்தி திரைப்படங்களில் குணச்சித்திர நடிகராகவும் வில்லனாகவும் நடித்து மிகவும் பிரபலமானவர் ஆஷிஷ் வித்யார்த்தி.

ஹிந்தியை தொடர்ந்து, தெலுங்கு, பெங்காலி போன்ற மொழிகளிலும் நடிக்க துவங்கிய இவர், தமிழில் 2001-ம் ஆண்டு, தரணி இயக்கத்தில் வெளியான தில் திரைப்படத்தின் மூலம் முரட்டு போலீசாக அறிமுகமானார்.

தமிழில் இவர் நடித்த முதல் படம் சூப்பர் ஹிட் வெற்றி பெற்றதோடு, ஆஷிஷ் வித்யார்த்தியின் நடிப்பும் ரசிகர்களை வெகுவாக கவர்ந்தது. இதை தொடர்ந்து, விஜய், ரஜினி, அர்ஜுன், பிரசாந்த் போன்ற நடிகர்களுக்கு வில்லனாக நடிக்க துவங்கினார்.

வில்லனாக மட்டும் இன்றி, ஒரு சில படங்களில் குணச்சித்திர வேடத்திலும் நடித்தார். குறிப்பாக கில்லி படத்தில், விஜய்யின் தந்தையாகவும், மலைக்கோட்டை படத்தில் விஷாலுக்கு சித்தப்பா வேடத்திலும் நடித்திருந்தார்.

ஆனால் கடந்த சில வருடங்களாக இவை ஹிந்தி திரைப்படங்களில் மட்டுமே அதிகம் கவனம் செலுத்தி வருகிறார்.

நடிகர் ஆஷிஷ் வித்யார்த்தி நேற்று தன்னுடைய காதலியை இரண்டாவது திருமணம் செய்துகொண்டுள்ளார். இவர் ஏற்கனவே ராஜோஷி என்பவரை திருமணம் செய்து கொண்ட நிலையில், சமீபத்தில் தான் இவர்களுக்கு விவாகரத்து ஆனதாக கூறப்படுகிறது.

ஆஷிஷ் வித்யார்தி – ராஜோஷி தம்பதிக்கு அர்ஷ் என்கிற 23 வயது மகன் உள்ள நிலையில், தன்னுடைய 60-ஆவது வயதில் இரண்டாம் திருமணம் செய்து கொண்டு ஷாக் கொடுத்துள்ளார்.

இவர் திருமணம் செய்து கொண்டுள்ள ரூபாலி பருவாவுக்கு 50 வயது ஆகிறது. இவர் கௌகாத்தியில் பேஷன் ஸ்டோர் ஒன்றையும் நடத்தி வருவது குறிப்பிடத்தக்கது.

தற்போது இவர்களின் திருமண புகைப்படங்கள் சமூக வளைத்ததில் வைரலாக பார்க்கப்பட்டு வருகிறது. ரூபாலி தன்னுடைய திருமணத்தில், நடனமாடி மகிழ்ச்சியை வெளிப்படுத்தியுள்ளார்.

மேலும், இவர்களது திருமணத்தில் பிரபலங்கள் யாரும் கலந்து கொள்ளவில்லை. நெருங்கிய குடும்ப உறுப்பினர்கள் மற்றும் நண்பர்கள் மட்டுமே கலந்து கொண்டதாக கூறப்படுகிறது.

 

Exit mobile version