Tamil News

சொந்த ஊரில் மாரிமுத்துவின் உடல் தகனம்: கதறிய மனைவி

தமிழ்த் திரைப்பட இயக்குநரும் நடிகருமான மாரிமுத்து, நேற்று மாரடைப்பால் சென்னையில் காலமானார்.

தேனி மாவட்டம் வருசநாடு அருகில் உள்ள பசுமலை தேரி கிராமத்தை சேர்ந்தவர் மாரிமுத்து (57).

அவரது உடலுக்கு பல்வேறு திரையுலகினர் அஞ்சலி செலுத்திய நிலையில் மாலையில் அவரது உடல் அவரது சொந்த ஊரான தேனிக்கு கொண்டுசெல்லப்பட்டது.

இன்று அதிகாலை 3மணி அளவில் தேனி மாவட்ட எல்லையை அவரது உடல் அடைந்ததும் அங்கு காத்திருந்த ஏராளமானோர் மாரிமுத்துவின் உடலுக்கு அஞ்சலி செலுத்தினர்.

அதன்பிறகு அவரது கிராமமான பசுமலைதேரிக்கு எடுத்து செல்லப்பட்டது.

வீதியின் இருபுறமும் ஏராளமான பொதுமக்கள் நின்று அவருக்கு கண்ணீர் அஞ்சலி செலுத்தினர்.

6 மணி அளவில் அவரது வீட்டிற்கு முன்பு மாரிமுத்து உடல் வைக்கப்பட்டது. தொடர்ந்து பல்வேறு பகுதிகளில் இருந்து வந்த பொதுமக்களும் அஞ்சலி செலுத்தினர்.

இந்நிலையில், நடிகர் மாரிமுத்துவின் உடல் அவரது இல்லத்திலிருந்து ஊர்வலமாக எடுத்துச் செல்லப்பட்டு தகனம் செய்யப்பட்டது.

Exit mobile version