Site icon Tamil News

பணயக்கைதிகளை விடுவிக்கக் கோரி மூன்றாவது நாளாக அணிவகுப்பு

காசாவில் ஹமாஸால் பிடிக்கப்பட்டுள்ள பணயக்கைதிகளின் குடும்பத்தினர், அவர்களை விடுவிக்கக் கோரி ஜெருசலேமுக்கு மூன்றாவது நாள் அணிவகுப்பில் ஈடுபட்டுள்ளனர்.

பணயக்கைதிகளை விடுவிக்க ஜோ பிடனின் நிர்வாகம் செயல்பட வேண்டும் என்று டெல் அவிவ் நகரில் அமெரிக்க தூதரகத்தில் ஆர்ப்பாட்டம் ஒன்றும் நடைபெற்று வருகிறது .

டெல் அவிவ் ஆர்ப்பாட்டத்தின் ஏற்பாட்டாளர்கள் அமெரிக்க ஜனாதிபதி “இஸ்ரேலிய அரசாங்கத்தை விட பணயக்கைதிகள் பிரச்சினையில் அதிக அர்ப்பணிப்புடன் இருக்கிறார்” என்று கூறினர்,

மேலும் அவ்ர்கள் “ஹமாஸ் சிறைபிடிப்பு மற்றும் தீவிரவாத அரசாங்கத்தில் இருந்து கடத்தப்பட்டவர்களை அழுத்தம் கொடுத்து காப்பாற்ற” பிடனுக்கு அழைப்பு விடுத்துள்ளது.

Exit mobile version