Site icon Tamil News

காலி சிறையில் பரவிவரும் இனம்தெரியாத பக்டீரியா தொற்றால் பலர் பாதிப்பு!

காலி சிறைச்சாலையில் இரு கைதிகள் உயிரிழந்தமைக்கான காரணம் தெரியவந்துள்ளதாக மேலதிக சிறைச்சாலைகள் ஆணையாளர் நாயகம் சந்தன ஏக்கநாயக்க தெரிவித்துள்ளார்.

அந்தந்த உயிரிழப்புகளுக்கு பாக்டீரியா தொற்றுதான் காரணம் என தெரியவந்துள்ளதாக அவர் கூறியுள்ளார்.

நோய் அறிகுறிகளுடன் மேலும் 7 கைதிகள் சிறைச்சாலை மருத்துவமனையில் தடுத்து வைக்கப்பட்டுள்ளதாக கூறிய அவர்,  அந்த நபர்களுக்கு காய்ச்சல் மற்றும் தோல் தொற்று இருப்பதாக தெரிவிக்கப்பட்டுள்ளதாகவும்  குறிப்பிட்டுள்ளார்.

இறந்தவர்களும் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டவர்களும் ரிமாண்ட் சிறையில் உள்ள கைதிகள் எனவும்  இச்சம்பவம் தொடர்பாக  அறிக்கையைப் பெறவும் அதிகாரிகள் நடவடிக்கை எடுத்துள்ளதாகவும் குறிப்பிட்டுள்ளார்.

மேலும் இந்த தொற்றினால்  காலி சிறைச்சாலையில் தற்போது 1,023 கைதிகள் பாதிக்கப்பட்டுள்ளதாகவும் அறிவிக்கப்பட்டுள்ளது.

Exit mobile version