Site icon Tamil News

பிரான்ஸில் பெண் ஒருவரை அவமதித்த நபர் – பொலிஸார் எடுத்த அதிரடி நடவடிக்கை

பிரான்ஸ் தலைநகர் பாரிஸ் மெற்றோவில் வைத்து யூத பெண் ஒருவரை அவமதித்த ஒருவரைக் பொலிஸார் கைது செய்துள்ளனர்.

பாரிஸில் யூத மதத்துக்கு எதிரான தாக்குதல்கள் தொடர்ந்து இடம்பெற்றவண்ணம் உள்ளன.

29 வயதுடைய பெண் ஒருவர் கடந்த 4, புதன்கிழமை 9ஆம் இலக்க மெற்றோவில் வைத்து அவதிக்கப்பட்டிருந்தார்.

தகாத வார்த்தைகளில் அப்பெண்ணை திட்டியதுடன், சில அவமதிக்கும் வகையினால சைகையினையும் காட்டியுள்ளார். இக்காட்சிகள் மெற்றோவில் பயணித்த ஏனைய பயணிகளால் படம் பிடிக்கப்பட்டிருந்தது.

பின்னர், அப்பெண் வழக்கு தொடுத்ததை அடுத்து, இன்று ஓகஸ்ட் 16, வெள்ளிக்கிழமை குறித்த நபர் கைது செய்யப்பட்டார். மேலதிக விசாரணைகளுக்காக அவர் தடுத்து வைக்கப்பட்டுள்ளார்.

Exit mobile version