Site icon Tamil News

சீனாவின் பல் சிகிச்சையால் பலியான நபர்

பல் சிகிச்சை காரணமாக நபர் ஒருவர் மாரடைப்பு ஏற்பட்டு உயிரிழந்தார்.

சீனாவின் ஜெஜயாங் பகுதியில் இந்த சம்பவம் இடம்பெற்றுள்ளது.

குறித்த நபருக்கு ஒரே நாளில் 23 பற்களை அகற்றி, 12 பற்களை மீண்டும் பொருத்தி சிகிச்சை அளிக்கப்பட்டுள்ளது.

இதனையடுத்து அவர் 13 நாட்களின் பின்னர் மாரடைப்பு ஏற்பட்டு உயிரிழந்ததாக சர்வதேச ஊடகங்கள் தெரிவிக்கின்றன.

அத்துடன் உயிரிழந்த நபருக்கு ஒரு பல்லினை பொருத்துவதற்கு இலங்கை மதிப்பில் சுமார் 60,920 ரூபாய் வரையில் செலவிட்டுள்ளதாகத் தெரிவிக்கப்படுகின்றது.

Exit mobile version