Site icon Tamil News

இலங்கை: இரண்டு T-56 ஆயுதங்களுடன் ஒருவர் கைது

அரலகங்வில பொலிஸ் விசேட அதிரடிப்படையினரால் மேற்கொள்ளப்பட்ட தேடுதல் நடவடிக்கையின் போது இரண்டு T-56 ரக துப்பாக்கிகளுடன் 43 வயதுடைய நபர் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார்.

இலங்கை இராணுவப் புலனாய்வுப் பிரிவினர் வழங்கிய தகவலின் அடிப்படையில் ஓட்டமாவடியைச் சேர்ந்த சந்தேக நபர் கைது செய்யப்பட்டதாக இராணுவம் தெரிவித்துள்ளது.

சந்தேகநபரிடம் இரண்டு T-56 ரக துப்பாக்கிகள், இரண்டு மகசீன்கள், 60 தோட்டாக்கள், ஒரு ஜோடி தொலைநோக்கி மற்றும் வாள் ஆகியவை கண்டுபிடிக்கப்பட்டுள்ளன.

சந்தேக நபர் மேலதிக விசாரணைகளுக்காக பயங்கரவாத புலனாய்வு பிரிவினரிடம் ஒப்படைக்கப்பட்டுள்ளார்.

Exit mobile version