Site icon Tamil News

கட்டுநாயக்க விமான நிலையத்திற்கு வந்த நபர் ஒருவர் கைது – பையில் சிக்கிய பொருட்கள்

இலங்கைக்கு 365 மீன்கள் மற்றும் ஆமைகளை விற்பனைக்கு கொண்டு வந்த விமானப் பயணி ஒருவர் கட்டுநாயக்க விமான நிலையத்தில் கைது செய்யப்பட்டுள்ளார்.

சுங்க பல்லுயிர் பாதுகாப்பு பிரிவு மற்றும் விமான நிலைய சுங்க அதிகாரிகள் குழுவால் குறித்த நபர் கைது செய்யப்பட்டுள்ளார்.

தலவத்துகொட பிரதேசத்தில் வசிக்கும் 50 வயதுடைய வர்த்தகர் ஒருவரே இவ்வாறு கைது செய்யப்பட்டுள்ளார்.

சிங்கப்பூரில் இருந்து வந்த அவர் தனது பயணப் பையில் மீன்கள் மற்றும் ஆமைகளை மறைத்து வைத்திருந்ததாக சுங்க அதிகாரிகள் தெரிவித்தனர்.

இந்த மீன்கள் மற்றும் ஆமைகளை தனது நண்பருக்கு கொடுப்பதற்காக தீவிற்கு கொண்டு வந்ததாக சுங்க அதிகாரிகள் முன்னிலையில் தெரிவித்துள்ளார்.

சுங்க பல்லுயிர் பாதுகாப்பு பிரிவு அதிகாரிகளுக்கு கிடைத்த இரகசிய தகவலின் அடிப்படையில் சந்தேகநபர் கைது செய்யப்பட்டதாக நெத் நியூஸ் செய்தியாளர் தெரிவித்தார்.

Exit mobile version