Site icon Tamil News

மாலத்தீவு அதிபர் தேர்தலில் எதிர்கட்சி வேட்பாளர் முன்னிலை?

மாலத்தீவில் ஜனாதிபதித் தேர்தல்கள் இரண்டு முன்னணி வேட்பாளர்களும் சனிக்கிழமையன்று 50% க்கும் அதிகமான வாக்குகளைப் பெறத் தவறியதை அடுத்து, இரண்டாம் சுற்றுக்கு தயாராக இருப்பதாகத் தெரிவிக்கப்பட்டது.

எவ்வாறாயினும், தற்போதைய ஜனாதிபதி இப்ராஹிம் சோலிஹ் தனது பிரதான போட்டியாளரான மொஹமட் முயிஸை விட பின்தங்கியிருப்பதாக ஆரம்ப முடிவுகள் காட்டுகின்றன,

முன்னாள் ஜனாதிபதிக்கு 46% வாக்குகள் கிடைத்துள்ளன என தெரிவிக்கப்படுகின்றது.

தேர்தல் ஆணையம் அதிகாரப்பூர்வ தேர்தல் முடிவுகளை அறிவிக்க திட்டமிட்டிருந்தது. மெஜாரிட்டி கிடைக்காத நிலையில் 2-வது சுற்று தேர்தல் உறுதி செய்யப்பட்டால் அது இம்மாத இறுதியில் நடத்தப்படும் என்று தகவல் வெளியாகி உள்ளது.

அதிபர் தேர்தலில் வெற்றி பெற ஒரு வேட்பாளர் 50 சதவீதத்துக்கும் மேல் ஓட்டுகள் பெற வேண்டும் என்பது குறிப்பிடத்தக்கது.

Exit mobile version