Site icon Tamil News

மலேசியா சர்வதேச விமான நிலையத்தில் எரிவாயு கசிவு – 39 பேர் பாதிப்பு

மலேசியாவில் உள்ள கோலாலம்பூர் சர்வதேச விமான நிலையத்தில் வாயுக் கசிவு ஏற்பட்டு 39 பேர் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.

எரிவாயு கசிவு ஏற்பட்ட உடனேயே, தீயணைப்பு குழுக்கள் விமான நிலையத்திற்கு வந்தன, பின்னர் அவர்கள் இரசாயன கசிவு என்று தெரிவித்தனர்.

விஷ வாயுவை சுவாசித்தவர்களில் தலைச்சுற்றல், குமட்டல் மற்றும் வாந்தி போன்ற அறிகுறிகள் காணப்பட்டதாகவும், வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்ட 39 பேரில் மூவரின் நிலைமை கவலைக்கிடமாக இருப்பதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

விமானங்களில் ஏற வந்த பயணிகள் யாருக்கும் பாதிப்பு ஏற்படவில்லை என்றும் குறிப்பிடப்பட்டுள்ளது.

Exit mobile version