Site icon Tamil News

இஸ்ரேலுக்கு சொந்தமான கப்பல்களுக்கு தடைவிதிக்கும் மலேசியா!

இஸ்ரேலுக்கு சொந்தமான கொடியிடப்பட்ட கப்பல்கள் மற்றும் இஸ்ரேலின் கப்பல்களை மலேசிய துறைமுகத்தில் நிறுத்த தடை விதிப்பதாக அந்நாட்டு அரசாங்கம் அறிவித்துள்ளது.

இந்த முடிவு உடனடியாக அமுலுக்கு வருவதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. ஹமாஸுடனான போரில் இஸ்ரேலின் நடவடிக்கைகளுக்கு பதிலடி கொடுக்கும் வகையில் இவ்வாறு முடிவெடுக்கப்பட்டதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

மலேசிய பிரதமர் அன்வார் இப்ராஹிம் வெளியிட்டுள்ள அறிவிப்பில், பாலஸ்தீன மக்களுக்கு எதிராக நடந்து வரும் கொடுமைகளை காரணம் காட்டி, மனிதாபிமான கொள்கைகளை இஸ்ரேல் புறக்கணித்து, சர்வதேச சட்டத்தை மீறியதன் எதிரொலியாக இந்த தடை விதிக்கப்பட்டுள்ளது எனத் தெரிவித்துள்ளார்.

Exit mobile version