Site icon Tamil News

இந்திய பயணிகள் சொகுசு கப்பல் திருகோணமலைக்கு வருகை

சென்னையில் இருந்து இலங்கை வந்துள்ள சொகுசு கப்பல் இன்று (08.06.2023) திருகோணமலை துறைமுகத்தை வந்தடைந்தது.

சொகுசு கப்பல் (கொர்டேலியா குரூஸ்) தனது முதல் பயணத்தை மேற்கொண்டு நேற்று (07.06.2023) அம்பாந்தோட்டை துறைமுகத்தை வந்தடைந்தது.

குறித்த சொகுசு கப்பல் இன்று திருகோணமலையை வந்தடைந்ததுடன், பயணிகள் திருகோணமலையில் உள்ள சுற்றுலா தலங்களை பார்வையிட்டனர்.

கப்பலில் வந்துள்ள 744 பயணிகளும் சுற்றுலாத் தலங்களான சீகிரியா மற்றும் தம்புள்ளையை பார்வையிட அழைத்துச் செல்லப்படுவார்கள் எனவும் அறிவிக்கப்பட்டுள்ளது.

அதன் பிறகு மீண்டும் அந்த கப்பல் இந்தியாவின் சென்னைக்கு புறப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது. .

Exit mobile version