Site icon Tamil News

மகனுக்கு ஆதரவளிக்குமாறு மகிந்த கோரிக்கை

ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனவில் இருந்து விலகி ரணில் விக்கிரமசிங்கவுக்கு ஆதரவளிக்கும் பல நாடாளுமன்ற உறுப்பினர்களுக்கு முன்னாள் ஜனாதிபதி மகிந்த ராஜபக்ஷ அழைப்பு விடுத்து ஜனாதிபதி தேர்தலில் போட்டியிடும் தனது மகனுக்கு ஆதரவளிக்குமாறு கேட்டுக்கொண்டுள்ளார் .

வழமையை விடவும் சிநேகபூர்வமாக முன்னாள் ஜனாதிபதி அந்த நாடாளுமன்ற உறுப்பினர்களிடம் வேண்டுகோள் விடுத்து இந்த கோரிக்கையை விடுத்துள்ளார்.

தேர்தலுக்கு தேவையான செலவுகளை கூட தன்னால் வழங்க முடியும் என குறிப்பிட்டுள்ள முன்னாள் ஜனாதிபதி, கட்சியில் தொடர்ந்தும் இருக்குமாறும் கேட்டுக்கொண்டுள்ளார்.

நாமல் ராஜபக்சவுக்கு ஆதரவளிக்குமாறும், பின்னர் ரணில் விக்கிரமசிங்கவுக்கு ஆதரவளிக்குமாறும் மஹிந்த ராஜபக்ஷ விடுத்த கோரிக்கையும் இராஜாங்க அமைச்சர் பிரேமலால் ஜயசேகரவின் தாக்கத்திற்கு உள்ளாகியுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

Exit mobile version