Site icon Tamil News

பலத்தை காட்டிய மஹிந்த!

அரசியலில் இருந்து ஓய்வு பெறும் எண்ணம் இல்லை என முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ச தெரிவித்துள்ளார்.

ஒவ்வொரு கட்சியும் மாநாடுகளை நடத்த வேண்டும் எனவும், அதன் மூலம் கட்சியின் பலத்தை காட்ட முடியும் எனவும் அவர் குறிப்பிட்டார்.

பெரும்பான்மையான மக்கள் பொதுஜன பெரமுன திரண்டுள்ளதாக தெரிவித்த முன்னாள் ஜனாதிபதி, சில மாற்றங்கள் ஏற்பட்டாலும் மக்கள் பொதுஜன பெரமுனவை விட்டு தூரமாகவில்லை என்பதை கட்சி மாநாடு நிரூபித்துள்ளதாகவும் தெரிவித்தார்.

மக்கள் இன்னமும் பொதுஜன பெரமுன கட்சி மீது நம்பிக்கையில் உள்ளனர் என அவர் குறிப்பிட்டுள்ளார்.

அடுத்த ஜனாதிபதித் தேர்தலில் போட்டியிடும் நிலை தனக்கு இல்லை எனவும், கட்சியின் வேட்பாளர் யாராக இருந்தாலும் வெற்றிபெற ராஜபக்சக்கள் பாடுபடுவார்கள் எனவும் மஹிந்த ராஜபக்ச தெரிவித்துள்ளார்.

ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுன மற்றும் ஐக்கிய தேசியக் கட்சியுடன் இணைவது தொடர்பில் தனக்கு தெரியாது எனவும் அவர் தெரிவித்துள்ளார்.

Exit mobile version