Site icon Tamil News

இலங்கை ஜனாதிபதி அநுரவை புகழ்ந்த மஹிந்த – பூரண ஆதரவை அறிவித்த வஜிர

புதிய ஜனாதிபதி அனுரகுமார திஸாநாயக்க நாட்டை பொருளாதார ரீதியில் முன்னேற்றும் வகையில் முன்னெடுத்துச் செல்ல வல்லவர் என முன்னாள் ஜனாதிபதியும் ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனவின் தலைவரும் குருநாகல் மாவட்ட பாராளுமன்ற உறுப்பினருமான மஹிந்த ராஜபக்ஷ தெரிவித்துள்ளார்.

நேற்று குருநாகலில் ஊடக நிறுவனத்திற்கு தெரிவித்துள்ளார்.

ஒரு தேசம் என்ற வகையில் அந்த நோக்கத்திற்காக இந்த நாட்டின் அனைத்து தேசப்பற்றுள்ள குடிமக்களும் புதிய ஜனாதிபதிக்கு ஆதரவளிக்க வேண்டும் என்றும் அவர் கூறினார்.

வெவ்வேறு அரசியல் சித்தாந்தங்கள் இருந்தபோதிலும், இந்த நாட்டை ஒவ்வொரு துறையிலும் முன்னேற்றமடையச் செய்வதே நமது தலையாய கடமையாகும், எனவே அந்த இலக்கை அடைய ஒன்றிணைந்து செயல்படுவோம் என மஹிந்த ராஜபக்ஷ மேலும் கூறினார்.

ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனவின் மத்திய செயற்குழு, புதிய அரசாங்கத்தின் அபிவிருத்தித் திட்டங்களை முன்னெடுப்பதற்கு ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனவின் எவ்வாறு உதவ முடியும் என்பது குறித்து தற்போது கலந்துரையாடல்களை நடாத்தி வருகின்றது.

அத்துடன், ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுன, புதிய ஜனாதிபதி அனுர திஸாநாயக்கவிற்கு, மஹிந்த ராஜபக்ஷவிற்கு, ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுன எவ்வாறு உதவ வேண்டும் என்பது தொடர்பில் இறுதித் தீர்மானத்திற்கு வரவில்லை.

ஐக்கிய தேசியக் கட்சியின் தலைவரும் பாராளுமன்ற உறுப்பினருமான வஜிர அபேவர்தன நேற்று ஊடகங்களுக்கு கருத்துத் தெரிவிக்கையில், புதிய ஜனாதிபதி அனுர திஸாநாயக்கவின் அபிவிருத்தித் திட்டங்களை முன்னெடுத்துச் செல்வதற்கு அனைத்து அரசியல் கட்சிகளும் அவற்றின் ஆதரவாளர்களும் பூரண ஆதரவை வழங்க வேண்டும் என குறிப்பிட்டுள்ளார்.

பொதுத் தேர்தல் ஏற்கனவே அறிவிக்கப்பட்டுள்ளதால், தற்போதைய பொருளாதார நெருக்கடியிலிருந்து மீள இந்த நாட்டு மக்களுக்கு சிறந்த நாளைய தினத்தை மலரச் செய்வதற்காக பொதுத் தேர்தலில் இருந்து தெரிவாகும் அனைத்து நாடாளுமன்ற உறுப்பினர்களும் சிறு அரசியல் வேறுபாடுகள் இன்றி அனுர திஸாநாயக்கவின் அரசாங்கத்திற்கு ஆதரவளிக்க வேண்டும் என அவர் குறிப்பிட்டுள்ளார்.

Exit mobile version