தமிழ் சினிமாவின் உச்ச நடிகராகவும், பாக்ஸ் ஆபிஸ் கிங்காகவும் வலம் வருபவர் விஜய்.
இதனிடையே விஜய்யின் மகன் ஜேசன் சஞ்சய் விரைவில் சினிமாவில் அறிமுகமாக உள்ளார். தனது தந்தையை போலவே சஞ்சயும் ஹீரோவாக அறிமுகமாவார் என்று எதிர்பார்க்கப்பட்ட நிலையில் இயக்குனராக அறிமுகமாக உள்ளார்.
சினிமா மேக்கிங், டைக்ரஷன் குறித்து படிப்பை வெளிநாட்டில் பயின்றுள்ள ஜேசன், Pull The Trigger என்ற குறும்படத்தை இயக்கி உள்ளார். இதை தொடர்ந்து தற்போது தமிழ் சினிமாவின் இயக்குனராக அறிமுகமாக உள்ளார்.
லைகா புரொடக்ஷன்ஸ் நிறுவனம் இந்த படத்தை தயாரிக்க உள்ளது. இந்த படம் தொடர்பான அறிவிப்பு கடந்த ஆண்டே வெளியான நிலையில் இந்த படத்தின் ஹீரோ யார் என்பது உள்ளிட்ட எந்த அறிவிப்பும் இதுவரை வெளியாகவில்லை.
விஜய் சேதுபதி, துருவ் விக்ரம், கவின், சிவகார்த்திகேயன் என பல ஹீரோக்களிடம் இந்த படத்தில் நடிக்க பேச்சுவார்த்தை நடந்ததாக தகவல்கள் வெளியானது. எனினும் இந்த படத்தை பலரும் ரிஜெக்ட் செய்ததாக கூறப்படுகிறது.
தற்போது ஜேசன் தனது படத்தின் ஸ்க்ரிப்ட் எழுதும் பணியில் இருப்பதாகவும் விரைவில் இந்த பணிகள் முடிவடையும் என்றும் தகவல்கள் தெரிவிக்கின்றன. மேலும் அவர் இயக்க உள்ள படத்தின் நடிகர்கள் தேர்வும் முடிந்துவிட்டதாக கூறப்படுகிறது. எனினும் இதுகுறித்த அதிகாரப்பூர்வ அறிவிப்பு வெளியாகவில்லை.
இந்த நிலையில் லைகா நிறுவனம் ஜேசன் சஞ்சய்யின் பிறந்தநாளை முன்னிட்டு வாழ்த்து தெரிவித்து போஸ்டர் ஒன்றை வெளியிட்டுள்ளது. வளர்ந்து வரும் இயக்குனர் ஜேசன் சஞ்சய்க்கு பிறந்தநாள் வாழ்த்துகள், உங்கள் பாதையில் வெற்றிகளும் சாதனைகளும் தொடரட்டும் என்று பதிவிட்டுள்ளது.