Site icon Tamil News

பெருவில் பஸ் மீது மோதிய லொரி ; இருவர் பலி ,20 பேர் படுகாயம்

தென் அமெரிக்க நாடான பெருவின் வடக்கு பான்-அமெரிக்க நெடுஞ்சாலையில் லாரி ஒன்று சென்று கொண்டிருந்தது. அன்காஷ் என்ற இடத்துக்கு அருகே சென்றபோது லொரி திடீரென டிரைவரின் கட்டுப்பாட்டை இழந்தது.இதனால் நிலைதடுமாறி எதிரே வந்த பஸ் மீது மோதியது.

இந்த விபத்தில் லாரி டிரைவர் உள்பட 2 பேர் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தனர். மேலும் பஸ்சில் இருந்த 20 பேருக்கு படுகாயம் ஏற்பட்டது. மீட்பு படையினர் அவர்களை மீட்டு சிகிச்சைக்காக மருத்துவமனையில் அனுமதித்தனர்.

Exit mobile version