Tamil News

ரஷ்ய தம்பதியைக் காப்பாற்ற முயன்ற உயிர்காப்பாளருக்கு நேர்ந்த துயரம்!

வஸ்கடுவ கடற்பரப்பில் பலத்த நீரோட்டம் காரணமாக அடித்துச் செல்லப்பட்ட ரஷ்ய தம்பதியரை காப்பாற்ற முற்பட்ட 36 வயதுடைய உயிர்காப்பாளர் நீரில் மூழ்கி உயிரிழந்துள்ளார்.

அதன்படி, அப்பகுதியில் உள்ள ஹோட்டல் ஒன்றில் உயிர்காக்கும் பணியில் ஈடுபட்டிருந்த இறந்தவர், ரஷ்யப் பெண்ணின் அலறல் சத்தம் கேட்டு தம்பதியைக் காப்பாற்ற முயன்றார்.

இருப்பினும், அவர் மேலும் கடலுக்குள் இழுத்துச் செல்லப்பட்டார், அதன் பிறகு மற்ற இரண்டு ஹோட்டல் ஊழியர்கள் மூவரையும் காப்பாற்ற முயன்றனர். அவர்களும் அடித்துச் செல்லப்பட்டதாக நேரில் பார்த்தவர்கள் தெரிவித்தனர்.

அவர்களின் முயற்சி தோல்வியடைந்ததை அடுத்து, உள்ளூர்வாசிகள் குழு ரஷ்ய தம்பதிகள் உட்பட நான்கு பேரைக் காப்பாற்றியதுடன் மேலும் இறந்தவரின் உடலையும் கரைக்கு கொண்டு வந்தனர்

உயிரிழந்தவர் களுத்துறையில் வசிக்கும் இரண்டு பிள்ளைகளின் தந்தை என அடையாளம் காணப்பட்டுள்ளார்.

Exit mobile version