Tamil News

அனைவரும் எதிர்பார்த்து காத்திருந்த அந்த நாள் வந்துவிட்டது… குட்டி கதை கேட்க தயாரா???

விஜய் நடிப்பில் உருவாகி இருக்கும் லியோ அடுத்த மாதம் திரைக்கு வரவுள்ள நிலையில் அதன் இசை வெளியீட்டு விழாவிற்கான ஏற்பாடுகள் தடபுடலாக நடந்து வருகிறது.

அந்த வகையில் வரும் 30ஆம் தேதி இப்படத்தின் இசை வெளியீட்டு விழா நேரு உள் விளையாட்டு அரங்கில் மிகப் பிரம்மாண்டமாக நடைபெற உள்ளது.

இதில் கலந்து கொள்வதற்காக மாவட்ட வாரியாக ரசிகர்களுக்கு 200 பாஸ்களும் வழங்கப்பட்டு வருகிறது. அது மட்டுமல்லாமல் நிகழ்ச்சி நடைபெறும் இடத்தில் பல கட்டுப்பாடுகளும் விதிக்கப்பட்டிருக்கிறது.

அதன்படி அரங்கத்திற்கு வெளியே படம் சம்பந்தப்பட்ட போஸ்டர்களோ, பேனர்களோ இருக்கக் கூடாது என ரசிகர்களுக்கு அறிவுறுத்தப்பட்டிருக்கிறது.

மேலும் அவர்கள் தங்களுடைய சொந்த வாகனங்களில் தான் வர வேண்டும் மற்றும் பொதுமக்களை எக்காரணம் கொண்டும் தொந்தரவு செய்யக்கூடாது என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது. ஏனென்றால் சமீபத்தில் ஏ. ஆர். ரகுமான் நடத்திய இசைக்கச்சேரி பெரும் பிரளயத்தையே ஏற்படுத்தியது.

அதனாலேயே இந்த முன்னெச்சரிக்கை நடவடிக்கையை லியோ டீம் எடுத்துள்ளது.

Exit mobile version