Tamil News

த்ரிஷாவுடன் ரொமான்ஸ் காட்சி கேட்ட விஜய்? லோகேஷூடன் மோதல்? நடந்தது என்ன?

விஜய் – லோகேஷ் கூட்டணியில் உருவாகியுள்ள லியோ அக்டோபர் 19ஆம் தேதி வெளியாகும் என அறிவிக்கப்பட்டது. ஆனால், விஜய் – லோகேஷ் கனகராஜ் இடையே மோதல் ஏற்பட்டுள்ளதாகவும், அதனால் லியோ ரிலீஸ் தள்ளிப் போக வாய்ப்புள்ளதாகவும் நேற்று பரபரப்பான செய்தி ஒன்று வெளியானது.

எனினும் இது குறித்து படக்குழு உண்மையான செய்தியை வெளியிட்டுள்ளது.

லியோ, அக்டோபர் 19ம் தேதி வெளியாகிறது. 7 ஸ்கீரின் ஸ்டூடியோஸ் தயாரிப்பில் லலித் குமார் தயாரித்துள்ள இந்தப் படத்துக்கு ரசிகர்களிடம் அதிக எதிர்பார்ப்பு காணப்படுகிறது. அதனால் லியோ இசை வெளியீட்டு விழாவை பிரம்மாண்டமாக நடத்த படக்குழு திட்டமிட்டுள்ளது.

ஆனாலும், இன்னும் இசை வெளியீட்டு விழா தேதி அறிவிக்கப்படவில்லை. இதற்கு காரணம் விஜய் – லோகேஷ் இடையே ஏற்பட்ட மோதல் தான் என சொல்லப்பட்டது.

அதாவது, லியோ படத்தில் த்ரிஷாவுடன் ரொமான்ஸ் காட்சிகளும் ஒரு டூயட்டும் வைக்க வேண்டும் என லோகேஷிடம் விஜய் கூறியிருந்தாராம். இதற்கு மறுப்புத் தெரிவித்துவிட்ட லோகேஷ், லியோவில் இருந்து விலகிவிட்டதாகவும், மீதமிருக்கும் பணிகளை இயக்குநர் ரத்ன குமார் தான் பார்த்து வருவதாகவும் செய்திகள் வெளியாகின.

அதனால் தான் லியோ இசை வெளியீட்டு விழாவுக்கான தேதி இன்னும் அறிவிக்கப்படவில்லை என சொல்லப்பட்டது.

ஆனால், விஜய் – லோகேஷ் இடையே எந்த மோதலும் இல்லையெனவும், இந்த தகவல்கள் முற்றிலும் போலியானது எனவும் தற்போது தெரியவந்துள்ளது.

நேற்று முதல் சமூக வலைத்தளங்களில் வைரலாகி வந்த இந்த செய்தியை, லியோ படக்குழுவினரே மறுத்துவிட்டதாக சொல்லப்படுகிறது.

அதுமட்டும் இல்லாமல் லியோ ரிலீஸ் தேதியில் எந்த மாற்றமும் இல்லையென சொல்லப்படுகிறது. ஏற்கனவே அறிவித்தபடி, அக்டோபர் 19ம் தேதி லியோ ரிலீஸாகும் என தகவலகள் வெளியாகியுள்ளன.

 

Exit mobile version