Site icon Tamil News

கனமழையால் வங்கதேசத்தில் நிலச்சரிவு ; ரோஹிங்கியா அகதிகள் 9 பேர் பலி

தென்கிழக்கி வங்கதேசத்தில் பல்வேறு குடியிருப்பு பகுதிகளில் பாதிப்பை ஏற்படுத்திய மழையால் உருவான நிலச்சரிவால் ரோஹிங்கியா முகாம்களில் தங்கியிருந்த 9பேர் பலியானதாக புதன்கிழமை அதிகாரிகள் தெரிவித்தனர்.

அகதிகள் மறுவாழ்வு துறையின் கூடுதல் ஆணையர் முகமது சம்சுதுஷா,காக்ஸ் பஜார் மாவட்டத்தில் உள்ள முகாம் எண் 9 மற்றம் 10 நிலச்சரிவால் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளதாக தெரிவித்தனர்.

செவ்வாய் கிழமை முதல் கடும்மழை பெய்துவரும் மாவட்டத்தில் ரோஹிங்கியா மக்கள் 33 முகாம்களில் தங்கியுள்ளனர். அபாயமான பகுதிகளில் உள்ளவர்களை மீட்கும் பணி துரிதப்படுத்தப்படுள்ளதாக முகமது சம்சுதுஷா தெரிவித்தார்.

Exit mobile version