Site icon Tamil News

இலங்கையில் பல பகுதிகளுக்கு மண்சரிவு அபாய முன்னெச்சரிக்கை

4 மாவட்டங்களுக்கு மண்சரிவு அபாய முன்னெச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளதாக தேசிய கட்டட ஆராய்ச்சி நிறுவகம் தெரிவித்துள்ளது.

இதன்படி, பதுளை, கண்டி, நுவரெலியா மற்றும் மொனராகலை ஆகிய மாவட்டங்களுக்கு மண்சரிவு அபாய முன்னெச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.

தொடரும் சீரற்ற காலநிலை காரணமாக லுணுகலை காவல்துறை பிரிவுக்கு உட்பட்ட 19ஆம் கட்டை பழைய தொழிற்சாலை பிரிவில், மண்சரிவு அபாயம் காரணமாக 115 குடும்பங்களைச் சேர்ந்த 400 பேர் இடம்பெயர்ந்துள்ளனர்.

Exit mobile version