Site icon Tamil News

பிலிப்பைன்ஸில் கனமழையால் ஏற்பட்ட நிலச்சரிவு ; கர்ப்பிணி உட்பட நால்வர் பலி!

பிலிப்பைன்ஸ் நாட்டில் கனமழையால் ஏற்பட்ட நிலச்சரிவில் சிக்கி கர்ப்பிணி பெண் உள்பட 4 பேர் பரிதாபமாக உயிரிழந்துள்ளனர்.

பிலிப்பைன்ஸ் – கியூசான் மாகாணம் பரங்கி உமிரேயில் உள்ள சிட்டியோ ஏஞ்சலோவில் தொடர் மழை பெய்ந்து வருகிறது.இந்த கனமழை காரணமாக அப்பகுதியில் நிலச்சரிவு ஏற்பட்டது. இதனால் அங்குள்ள சுரங்கங்கள் திடீரென இடிந்து விழுந்து பெரும் சேதத்தை சந்தித்தன. மேலும் நிலச்சரிவு காரணமாக மலை அடிவாரத்தில் இருந்த நூற்றுக்கும் அதிகமான வீடுகள் மண்ணில் புதைந்தன.

மேலும், குறித்த நிலச்சரிவில் சிக்கி பலர் மண்ணிற்குள் புதைந்தனர். தகவலறிந்த இராணுவத்தினர் பேரிடர் மீட்புத்துறையினருடன் களத்தில் இறங்கி மீட்புப்பணியில் ஈடுபட்டனர்.

நிலச்சரிவில் சிக்கி உயிருடன் புதைந்த கர்ப்பிணி பெண் உள்பட 4 பேரின் உடல்களை தோண்டி எடுத்துள்ளனர்.மேலும் பலர் மாயமாகி உள்ளதால் பலி எண்ணிக்கை உயரும் அபாயம் உள்ளது. மீட்பு நடவடிக்கை தொடர்ந்து நடைபெற்று வருகிறது.

Exit mobile version