Site icon Tamil News

தொழிலாளர் கட்சி பிரித்தானியாவிற்கு ஆபத்தானது – கிராண்ட் ஷாப்ஸ் எச்சரிக்கை!

பிரித்தானிய தொழிலாளர் கட்சியானது ஆட்சிக்கு வந்தால் அதிகளவிலான வரியை அறிமுகப்படுத்தும் என பாதுகாப்பு செயலாளர் கிராண்ட் ஷாப்ஸ் தெரிவித்துள்ளார்.

அடுத்த நாடாளுமன்றத்தில் கன்சர்வேட்டிவ் கட்சிக்கு 72 இடங்கள் மட்டுமே கிடைக்கும் என்று கருத்து கணிப்புகள் வெளியாகியுள்ளன. இந்நிலையில் இது தொடர்பில் ஊடகவியலாளர்கள் கிராண்ட் ஷாப்ஸிடம் கேள்வி எழுப்பினர்.

அதற்கு பதிலளித்த அவர் இன்னும் யாரும் வாக்களிக்கவில்லை என்றும், கருத்துக்கணிப்புகள் அந்த நேரத்தில் ஒரு ஸ்னாப்ஷாட் தான் என்றும் கூறியுள்ளார்.

தொழிற்கட்சி அரசாங்கம் “இந்த நாட்டிற்கு மிகவும் ஆபத்தானது என எச்சரிக்கை விடுத்த அவர், நாங்கள் ஒரு தொழிற்கட்சி அரசாங்கத்தை வைத்திருக்க முடியாது.” என்றும் கூறியுள்ளார்.

அத்துடன் வீடுகள், கார்கள், ஓய்வூதியம் உள்பட அனைத்து துறைகளில் வரி அதிகரிக்கப்படும் என்றும் அவர் மேலும் கூறியுள்ளார்.

Exit mobile version