உலகம்

நைஜீரியாவில் 280க்கும் மேற்பட்ட பள்ளி மாணவர்கள் கடத்தல் – தீவிர தேடுதல் பணியில் ராணுவத்தினர்

நைஜீரியா நாட்டின் வடக்கு பகுதியில் உள்ள கடுனா மாகாணத்தில் குரிகா என்ற பகுதியில் உள்ள பள்ளியில் இருந்து 287 மாணவர்கள் கடத்தப்பட்டுள்ள சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. சுமார் 8-15 வயதுக்குட்பட்ட மாணவர்களை ஆயுதம் ஏந்திய கும்பல் இருசக்கர வாகனங்களில் கடத்திச் சென்றதாக கூறப்படுகிறது.

இந்த கடத்தல் சம்பவத்தின்போது மாணவர்களை காப்பாற்ற முயன்ற ஒரு நபரை கடத்தல்காரர்கள் சுட்டுக் கொன்றதாக பள்ளி நிர்வாகம் தெரிவித்துள்ளது. கடத்தல்காரர்கள் மாணவர்களை அருகில் உள்ள காட்டுப்பகுதிக்கு அழைத்துச் சென்றதாக கூறப்படும் நிலையில், மாணவர்களை தேடும் பணியில் நைஜீரிய ராணுவத்தினர் தற்போது தீவிரமாக ஈடுபட்டு வருகின்றனர்.

நைஜீரியாவின் வடக்கு பகுதியில் ஆயுதம் ஏந்திய குழுக்களால் பெண்கள் மற்றும் குழந்தைகள் கடத்தப்படும் நிகழ்வுகள் சமீப காலமாக அதிகரித்து வருகின்றன. இதற்கு முன் அங்கு கடந்த 2021ம் ஆண்டு இதுபோன்ற கடத்தல் சம்பவங்கள் அதிக அளவில் நடந்துள்ளன. கடந்த இரண்டு ஆண்டுகளாக கடத்தல் சம்பவங்கள் சற்று குறைந்த நிலையில்,இந்த ஆண்டு தொடக்கத்தில் இருந்து மீண்டும் இத்தகைய சம்பவங்கள் மீண்டும் அதிகரித்துள்ளதால் அப்பகுதி மக்கள் அச்சமடைந்துள்ளனர்.

(Visited 4 times, 1 visits today)
Avatar

Mithu

About Author

Leave a comment

Your email address will not be published. Required fields are marked *

You may also like

உலகம் விளையாட்டு

சாம்பியன்ஸ் லீக் அரையிறுதிக்கு முன்னேறிய ரியல் மாட்ரிட் மற்றும் ஏசி மிலன்

  • April 19, 2023
ரியல் மாட்ரிட் சாம்பியன்ஸ் லீக் அரையிறுதியில் செல்சிக்கு எதிராக 2-0 என்ற கணக்கில் வெற்றி பெற்றது, அது 4-0 என்ற மொத்த வெற்றியைப் பெற்றது, போராடிக்கொண்டிருந்த லண்டன்
உலகம் கருத்து & பகுப்பாய்வு

விராட் கோலி முதல் விஜய் வரை அனைவரது டுவிட்டர் கணக்குகளிலும் ப்ளூ டிக் நீக்கம்

  • April 21, 2023
டுவிட்டர் சந்தா செலுத்தாதவர்களின் கணக்குகளில் ப்ளூ டிக் நீக்கப்பட்டுள்ளதாக தெரியவந்துள்ளது உலகின் மிகபெரிய பணக்காரரும், வாகன உற்பத்தி நிறுவனமான டெஸ்லாவின் தலைமை செயல் அதிகாரியான எலான் மஸ்க்

You cannot copy content of this page

Skip to content