Tamil News

பாலிவுட்டில் தயாரிப்பாளராக களமிறங்கும் ‘கே.ஜி.எஃப்’பட நாயகன் யஷ்..

‘கே.ஜி.எஃப்’ பட ஹீரோ யஷ் பாலிவுட்டில் தயாரிப்பாளராகக் களமிறங்குகிறார். ரன்பீர், சாய்பல்லவி நடிக்கும் ‘ராமாயணா’ படத்தைத்தான் தயாரிக்கிறார் யஷ். இதற்கான அறிவிப்பு இன்று வெளியாகியுள்ளது.

பிரபாஸ், கீர்த்தி சனோன் நடிப்பில் ‘ஆதிபுருஷ்’ என்ற பெயரில் ராமாயணம் கதை படமாக்கப்பட்டது. ஆனால், அந்தப் படத்தின் மோசமான கிராஃபிக்ஸ் மற்றும் நடிகர்கள் தேர்வால் அந்தப் படம் தோல்வியைத் தழுவியது. இப்படியான சூழ்நிலையில்தான் ரன்பீர், சாய்பல்லவி ராமன் – சீதையாக நடிக்க புதிய ‘ராமயணா’ படமாக்கப்பட இருக்கிறது. இதற்கான படப்பிடிப்பு இரண்டாம் கட்ட நடிகர்களோடு கடந்த சில தினங்களுக்கு முன்பு தொடங்கியது.

ராமாயணம்' படத்துக்கு தயாராகும் நடிகர்கள் | ramayanam ready to take off -  hindutamil.in

இந்தப் படத்தில் கன்னட நடிகர் யஷ் இராவணனாக நடிக்க இருப்பதாகச் சொல்லப்பட்டது. ஆனால், அதை மறுத்த யஷ் இந்தப் படத்தைத் தயாரிக்க இருப்பதாக அறிவித்துள்ளார். யஷ் பாலிவுட்டில் தயாரிப்பாளராகக் களமிறங்கும் செய்தி ரசிகர்களை ஆச்சரியப்பட வைத்துள்ளது.

யஷின் மான்ஸ்டர் மைண்ட் கிரியேஷன்ஸ் மற்றும் நமித் மல்ஹோத்ராவின் பிரைம் ஃபோக்கஸ் ஸ்டுடியோஸ் நிறுவனங்கள் இணைந்து இந்தப் படத்தைத் தயாரிக்கிறது. இதுகுறித்து யஷ் பகிர்ந்து கொண்டதாவது, “இந்திய சினிமாவை உலக அளவில் வெளிப்படுத்தும் வகையில் திரைப்படங்களை உருவாக்க வேண்டும் என்பதுதான் எனது நீண்ட நாள் ஆசை. நமித் மல்ஹோத்ராவும், நானும் சினிமா தொடர்பாக நிறைய பேசி இருக்கிறோம். இதில் ராமாயணமும் இடம்பெற்றது.

அவருடைய ஆர்வம் எனக்குப் பிடித்திருந்தது. ரசிகர்களுக்கு சிறந்த அனுபவமாக இதைக் கொண்டு வர வேண்டும் என்பதில் உறுதியாக இருக்கிறோம்” என்றார். யஷ் தற்போது நடித்து வரக்கூடிய ‘டாக்ஸிக்’ படத்தையும் அவரது நிறுவனம் தயாரிக்கிறது என்பது குறிப்பிடத்தக்கது.

Exit mobile version