Site icon Tamil News

போராட்டம் காரணமாக வரி உயர்வு திட்டங்களை ரத்து செய்த கென்யா

கென்யாவின் அரசாங்கம் பல வரி உயர்வுகளை சுமத்துவதற்கான திட்டங்களை திரும்பப் பெற்றுள்ளது.

பாராளுமன்ற கட்டிடத்திற்கு அருகே கூடியிருந்த எதிர்ப்பாளர்கள் மீது போலீசார் கண்ணீர் புகை குண்டுகளை வீசியதால், சர்ச்சைக்குரிய மசோதாவில் திருத்தங்களை அறிவித்தது.

“ரொட்டி, சர்க்கரை போக்குவரத்து, நிதி சேவைகள், அந்நிய செலாவணி பரிவர்த்தனைகள் மற்றும் 2.5 சதவீத மோட்டார் வாகன வரி மீதான உத்தேச 16 சதவீத வாட் வரியை நீக்க நிதி மசோதா திருத்தப்பட்டுள்ளது” என்று ஜனாதிபதி ஒரு அறிக்கையில் தெரிவித்துள்ளது.

இந்த மசோதா பரவலான எதிர்ப்பை ஏற்படுத்தியுள்ளது. முன்னதாக தலைநகர் நைரோபியில் உள்ள பாராளுமன்ற கட்டிடத்திற்கு அருகே “பாராளுமன்றத்தை ஆக்கிரமிப்பு” என்று பெயரிடப்பட்ட போராட்டத்தில் பங்கேற்ற நூற்றுக்கணக்கான மக்களை கலைக்க போலீசார் கண்ணீர் புகை குண்டுகளை வீசினர்.

போராட்டக்காரர்கள், ஊடகவியலாளர்கள் மற்றும் உரிமைக் குழுக்களின் பார்வையாளர்கள் உட்பட 210 பேர் கைது செய்யப்பட்டதாக சிவில் சமூகக் குழுக்கள் தெரிவித்துள்ளன.

போராட்டங்களை அவதானித்த அதன் ஊழியர்கள் சிலர் கைது செய்யப்பட்டதாக அம்னெஸ்டி கென்யா உரிமைகள் குழு தெரிவித்துள்ளது.

“கைது செய்யப்பட்ட அனைத்து எதிர்ப்பாளர்கள் மற்றும் பார்வையாளர்களை உடனடியாக மற்றும் நிபந்தனையின்றி விடுவிக்க நாங்கள் கோருகிறோம்,” என்று குழு தெரிவித்தது.

Exit mobile version