Tamil News

நள்ளிரவில் கீர்த்தி சுரேஷூக்கு குடிகாரன் செய்த மோசமான செயல்… அதிர்ச்சி சம்பவம்

மொழிகளைக் கடந்து திரையுலகில் முன்னணி நடிகையாக வலம் வருபவர் கீர்த்தி சுரேஷ்.

கீர்த்தி கைவசமுள்ள படங்களில் சைரன் படம் ஷூட்டிங் முடிந்து ரிலீசுக்கு தயாராகி வருகிறது.

இப்படத்தை அந்தோணி பாக்கியராஜ் என்கிற புதுமுக இயக்குனர் இயக்கி உள்ளார். ஜெயம் ரவி நாயகனாக நடித்துள்ள இப்படம் வருகிற பிப்ரவர் 16-ந் தேதி திரைக்கு வர உள்ளது.

இந்த நிலையில், சைரன் பட புரமோஷனில் பிசியாக இருக்கும் கீர்த்தி சுரேஷ், தன் வாழ்க்கையில் நடந்த அதிர்ச்சி சம்பவம் ஒன்றை பகிர்ந்துள்ளார்.

அதன்படி “ஒரு நாள் இரவில் தன்னுடைய தோழியுடன் சாலையில் நடந்து சென்றுகொண்டிருந்தாராம். அப்போது குடிபோதையில் வந்த வாலிபர் ஒருவர் கீர்த்தி மேல் கைபோட்டாராம். இதனால் கடுப்பான கீர்த்தி அந்த நபருக்கு கன்னத்திலேயே பளார் பளார் என அறைவிட்டு அங்கிருந்து சென்றாராம்.

பின்னர் கொஞ்சம் தூரம் சென்றதும், கீர்த்தியின் தலையில் பலத்த அடி விழுந்துள்ளது. சில நிமிடங்கள் என்ன நடந்தது என்று புரியாமல் இருந்த கீர்த்தி சுரேஷ், திரும்பி பார்த்தபோது அந்த குடிகாரன் தான் தன்னை தலையில் தாக்கிவிட்டு ஓடியதை பார்த்துள்ளார்.

உடனே தனது தோழியுடன் சேர்ந்து அந்த குடிகாரனை விரட்டி பிடித்து அருகில் இருந்த போலீஸ் பூத்தில் நடந்ததை கூறி அவனை ஒப்படைத்துவிட்டு அங்கிருந்து சென்றாராம்” அவர் சொன்ன இந்த கதையை கேட்டு கீர்த்தியின் துணிச்சலை பலரும் பாராட்டி வருகின்றனர்.

Exit mobile version