Site icon Tamil News

இலங்கையில் குத்தாட்டம் போட்ட வெளிநாட்டவர்கள்!

இலங்கையில் பெலியத்த விகாரையின் பெரஹர ஊர்வலம் ஜூன் 7ஆம் திகதி இடம்பெற்றது.

இந்த நிலையில், குறித்த ஊர்வலம் பெலியத்த பிரதான பஸ் நிலையத்திற்கு வந்த போது, வெளிநாட்டினர் குழுவொன்று நடனமாடுவதைக் காட்டும் காணொளி சமூக ஊடகங்களில் வைரலாகி வருகின்றது.

சுற்றுலாப் பயணிகள் மற்றும் உள்ளூர்வாசிகள் பெரஹராவில் நடனமாடுவதைக் காண முடிந்தது, அலங்கரிக்கப்பட்ட சேலைகள் மற்றும் முதுகில் பச்சை குத்திக்கொண்டு இவர்கள் நடனமாடுகின்றனர்.

சம்பவம் தொடர்பில் தங்களுக்கு எதுவும் தெரியாது என பெலியத்த பொலிஸார் தெரிவித்தனர்.

எவ்வாறாயினும், பெலியத்த பஸ் நிலையத்தைச் சேர்ந்தவர்கள் சம்பவத்தை உறுதிப்படுத்தியுள்ளனர்.

Exit mobile version