Site icon Tamil News

சீனாவில் ஆரம்பப் பள்ளியில் கத்துக்குத்து : இருவர் உயிரிழப்பு, பலர் காயம்!

சீனாவில் ஆரம்பப் பள்ளி ஒன்றில் நடத்தப்பட்ட கத்திக்குத்து தாக்குதலில் இருவர் உயிரிழந்துள்ளதுடன் 10 பேர் காயமடைந்துள்ளனர்.

சீனாவின் தெற்கு ஜியாங்சி மாகாணத்தில் உள்ள Guixi நகரில் இந்த சம்பவம் இடம்பெற்றுள்ளது.

உயிரிழந்தவர்கள் குழந்தைகளா என்பது இன்னும் உறுதி செய்யப்படவில்லை.

சம்வம் தொடர்பில் 45 வயதுடைய பெண் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார். அவர் தாக்குதலுக்கு பழத்தை வெட்டும் கத்தியை பயன்படுத்தியுள்ளதாக பொலிஸார் அறிவித்துள்ளனர்.

ஆறு முதல் 12 வயது வரையிலான குழந்தைகள் படிக்கும்  ஆரம்பப் பள்ளி ஏன் தாக்குதலுக்கு இலக்கானது என்பது இன்னும் தெரியவில்லை.

சம்பவம் தொடர்பான மேலதிக விசாரணைகளை அதிகாரிகள் மேற்கொண்டு வருகின்றனர்.

 

Exit mobile version