Site icon Tamil News

கண்டி நகர் வெள்ளத்தில் மூழ்கும் அபாயம் – பேராசியர் எச்சரிக்கை

எதிர்வரும் காலங்களில் தென்மேற்கு பருவமழை தீவிரமடையும் போது கண்டி நகரம் பாரிய வெள்ளப்பெருக்குக்கு உள்ளாகலாம் என பேராதனை பல்கலைக்கழகத்தின் புவியியல் விஞ்ஞான பிரிவின் ஓய்வுபெற்ற பேராசிரியர் அதுல சேனாரத்ன தெரிவித்துள்ளார்.

அண்மைய நாட்களில் பெய்த அடை மழையினால் கண்டி நகரின் பல இடங்கள் பல தடவைகள் வெள்ளத்தில் மூழ்கியுள்ளதாகவும், கண்டி நகரைச் சுற்றியுள்ள முறைசாரா நிர்மாணங்களால் இந்த வெள்ளம் பாரியளவில் பாதிக்கப்பட்டுள்ளதாகவும் அவர் மேலும் வலியுறுத்தினார்.

கண்டி நகரில் உள்ள இரண்டு பிரதான கால்வாய்களில் மழை நீர் மற்றும் ஏனைய நீர் வெளியேறும் வகையில், நகருக்கு வெளியே உயரமான இடத்தில் அமைந்துள்ள முறைசாரா மற்றும் சட்டவிரோத நிர்மாணங்கள் இவ்வாறு செய்யப்பட்டுள்ளதாக அவர் கூறுகிறார்.

மகாவலி ஆறு, சிறு மழையிலும் கண்டி நகரம் வெள்ளத்தில் மூழ்கும் நிலை ஏற்பட்டுள்ளது.

கண்டி வில்லியம் கோபல்லவ மாவத்தையில் இருந்து ஆரம்பமாகி கோதம்பையில் மகாவலி ஆற்றில் கலக்கும் மத்திய கால்வாய் மற்றும் டி.எஸ்.சேனாநாயக்க வீதியின் மூலையில் இருந்து ஆரம்பித்து கடுகஸ்தோட்டை அலி நாவனாதோட்டைக்கு அருகில் மகாவலி ஆற்றில் இணையும் மத்திய கால்வாய் மிகவும் குறுகலாக மாறியுள்ளதாக அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.

கண்டியைச் சுற்றியுள்ள பகுதிகளில் குறுகிய காலத்தில் 100 மில்லிமீற்றருக்கும் அதிகமான மழை பெய்தால், நகரம் பெரும் சேதத்தை ஏற்படுத்தும் வெள்ளத்தால் பாதிக்கப்படலாம் என்று பேராசிரியர் குறிப்பிட்டார்.

இந்த பாரதூரமான நிலைமை தொடர்பில் உரிய பொறுப்பு வாய்ந்த அதிகாரிகளுக்கு அறிவிக்கப்பட்டுள்ளதாகவும் பேராசிரியர் மேலும் வலியுறுத்தினார்.

Exit mobile version