Tamil News

மீண்டும் மருதநாயகம் படத்தை கையில் எடுக்கும் கமல்.. அமெரிக்கா போனதே இதுக்கு தானா?

உலகநாயகன் கமலஹாசன் விஜய் டிவியின் பிக்பாஸ் நிகழ்ச்சியில் இருந்து விலகிய போது அதற்காக பல காரணங்கள் சொல்லப்பட்டன.

ஆனால் அதெல்லாம் சும்மா கட்டுக்கதை என்பதற்கு ஆதாரமாக இப்போது ஒரு விஷயம் வெளியாகி இருக்கிறது.

கமல் தற்போது தன்னுடைய கனவு படத்தை கையில் எடுத்துள்ளார். கமல் மட்டுமில்லாமல் தமிழ் சினிமா ரசிகர்களே எதிர்பார்த்துக் கொண்டிருக்கும் மருதநாயகம் தான் அந்த படம்.

மருதநாயகம் என்ற பெயரை சொன்னதுமே நம்மில் பலருக்கு மெய் சிலிர்த்து விடும். அப்போதைக்கு தயாரிப்பாளர் யாருமே கிடைக்காததால் இந்த படம் கைவிடப்பட்டது. 1997 இல் தொடங்கி இன்று வரை கமலை பார்ப்பவர்கள் எல்லோருமே கேட்கும் கேள்வி மருதநாயகம் எப்போ சார் வரும்.

கமலின் ஒரே பதில் அந்த நமட்டு சிரிப்பு தான். சரி கமலே இதை கைவிட்டு விட்டார் போல நினைத்துக் கொண்டிருந்த போதுதான் சூப்பர் நியூஸ் ஒன்று வந்து சேர்ந்திருக்கிறது. அதாவது கமலஹாசன் அமெரிக்காவில் தங்கி 90 நாட்கள் AI கோர்ஸ் படிக்கிறார் என நமக்கு தெரியும்.

அவர் அதை படிப்பதற்கு காரணமே மருதநாயகம் படத்தை AI டெக்னாலஜி மூலம் எடுப்பதற்காகத்தான். பொருட்செலவில் எடுப்பதற்கு தான் தயாரிப்பாளர்கள் தயங்குவார்கள், தொழில்நுட்பம் என்று வரும்போது இந்த படத்தை ஈசியாக எடுத்துவிடலாம் என்பதுதான் கமலின் எண்ணம்.

கமல் நிலைத்திருந்தால் கதையை ஒரு குழுவிடம் கொடுத்து இதை AI டெக்னாலஜியில் எனக்கு உருவாக்கிக் கொடுங்கள் என சொல்லி இருக்கலாம். ஆனால் எதை செய்கிறோமோ அதை நாம் கற்று சரியாக செய்ய வேண்டும் என கமல் நிலைத்திருப்பது தான் பெரிய விஷயம்.

Exit mobile version