Site icon Tamil News

தேசிய மக்கள் சக்தி தலைவர்கள் குஜராத் முதல்வரை சந்தித்தனர்

இந்தியாவிற்கு சிறப்புப் பயணம் மேற்கொண்டுள்ள தேசிய மக்கள் சக்தியின் தலைவர்கள் இன்று குஜராத் முதல்வர் திரு.பூபேந்திரபாய் படேலை காந்திநகரில் உள்ள விதான சபாவில் (மாநில சட்டமன்றம்) சந்தித்துப் பேசினர்.

மாநிலத்தில் வறுமை ஒழிப்புக்கான வளர்ச்சி உத்திகள் மற்றும் மாநில நிர்வாக செயல்பாடுகள் குறித்து இங்கு விவாதிக்கப்பட்டது.

அதன்பின், அந்த மாநில தொழில் துறை அமைச்சருடன் சிறப்பு கூட்டம் நடத்தப்பட்டு, இந்திய அரசின் வளர்ச்சி மாதிரியாக பயன்படுத்தப்படும் ‘குஜராத் மாடல்’ குறித்த விளக்கமும் அளிக்கப்பட்டது.

எரிசக்தி சீர்திருத்தங்கள், விவசாயம் மற்றும் நீர், உள்கட்டமைப்பு மேம்பாடு, தொழில் மற்றும் முதலீடு, சுகாதாரம் மற்றும் பெண்கள் அதிகாரமளித்தல் ஆகியவை இந்த குஜராத் வளர்ச்சி மாதிரியின் முக்கிய பகுதிகளாகும்.

அகமதாபாத்தில் விவசாயப் பகுதிகள் மற்றும் விவசாயத் தொழில்கள் பற்றிய கண்காணிப்புச் சுற்றுலாவும் நடைபெற்றது.

Exit mobile version