Tamil News

அன்று இரவு சிவகார்த்திகேயனுக்கு நடந்தது என்ன? இரகசியம் உடைத்த பிரபலம்

சிவகார்த்திகேயன் இப்போது நடிகராக மட்டுமின்றி தயாரிப்பாளராகவும் ஜொலித்துவருகிறார். இப்போது அவர் சூரியை வைத்து கொட்டுக்காளி படத்தை தயாரித்திருக்கிறார்.

அந்தப் படத்தின் ட்ரெய்லர் வெளியீட்டு விழாவில் சிவகார்த்திகேயன் பேசிய விஷயம் சர்ச்சையை ஏற்படுத்தியது.

இந்தச் சூழலில் பிரபல பத்திரிகையாளர் பிஸ்மி தனியார் யூட்யூப் சேனல் ஒன்றுக்கு அளித்த பேட்டியில், “சிவகார்த்திகேயன் தன்னை வளர்த்துவிட்டவர்களை மிதித்துதான் இவ்வளவு உயரத்துக்கு வந்திருக்கிறார். அவரை அறிமுகப்படுத்திய் பாண்டிராஜைக்கூட சிவா மதிக்கவே இல்லை என்பதுதான் உண்மை.

ஒருமுறை சென்னையில் இருக்கும் ஹயாத் ஹோட்டலுக்கு இரவில் சென்றார் சிவகார்த்திகேயன். அப்போது அவர் அங்கு மிகப்பெரிய பிரச்னையில் சிக்கிவிட்டார். அதனை கேள்விப்பட்டு எஸ்கேப் ஆர்ட்டிஸ்ட் மதன் தான் அங்கு சென்று சிவகார்த்திகேயனை மீட்டு வந்தார். அது மட்டும் வெளியே தெரிந்திருந்தால் இப்போது சிவகார்த்திகேயன் என்ற நடிகரே இருந்திருக்கமாட்டார்” என்றார்.

Exit mobile version