Site icon Tamil News

இந்திய குடியரசு தின விழாவில் ஜோ பைடன்? வெளியான தகவல்

இந்திய குடியரசு தின விழாவில் அமெரிக்க அதிபர் ஜோ பைடன் தலைமை விருந்தினராக பங்கேற்க வாய்ப்பில்லை என்று செய்திகள் வெளியாகியுள்ளன.

இந்திய குடியரசு தின விழாவில் (2024) தலைமை விருந்தினராகப் பங்கேற்க வருமாறு ஜோ பைடனுக்கு, பிரதமர் நரேந்திர மோடி அழைப்பு விடுத்திருந்தார்.

எனவே, அவர் இந்தியாவுக்கு வர வாய்ப்புள்ளதாக கடந்த செப்டம்பரில் இந்தியாவுக்கான அமெரிக்க தூதர் எரிக் கார்செட்டி தெரிவித்தார்.

ஆனால், ஜோ பைடனின் இந்தியப் பயணம் குறித்து வெள்ளை மாளிகை தரப்பில் உறுதியான தகவல் எதுவும் இதுவரை தெரிவிக்கப்படவில்லை. இந்த நிலையில், 2024-ம் ஆண்டு பிற்பகுதியில் இந்தியாவில் க்வாட் உச்சி மாநாடு நடைபெறவுள்ளது. இதில் பங்கேற்க ஜோ பைடன் இந்தியாவுக்கு வருவார் என்று அமெரிக்க அரசு வட்டாரங்கள் தெரிவித்துள்ளன. ‘க்வாட்’ உச்சி மாநாடு திகதி இதுவரை உறுதி செய்யப்படவில்லை.

உறுப்பு நாடுகள் அனைத்தும் ஆலோசனை நடத்தி திகதி இறுதி செய்யப்படும் என்று தகவல் வெளியாகியுள்ளது.

Exit mobile version