Site icon Tamil News

வேலைவாய்ப்புகள் பறிபோகாது – பில்கேட்ஸ் கொடுத்த விளக்கம்

உலகமெங்கும் பெரும் தாக்கத்தை உருவாக்கியுள்ள செயற்கை நுண்ணறிவு எனப்படும் ஏஐ (AI) தொழில்நுட்பம் வேலை வாய்ப்பை பறிக்கும் என்று கூறப்படும் நிலையில் மைக்ரோசாஃப்ட் இணை நிறுவனர் மற்றும் உலகின் பெரும் பணக்காரர் பில்கேட்ஸ் இதற்கு வேறு விதமாக விளக்கம் கூறியுள்ளார்.

இதுகுறித்து பேசியுள்ள பில்கேட்ஸ், “ஒவ்வொரு புதிய தொழில்நுட்பம் வரும்போதும் மக்களுக்கு வேலைவாய்ப்பு குறித்த அச்சம் வரத்தான் செய்யும். ஆனால் அதனால் வேலை வாய்ப்புகள் காலியாகும் என்பது உண்மை கிடையாது.

1900ம் ஆண்டுகளில் விவசாய உற்பத்தியை தாண்டி எதுவும் இருக்காது என்று நினைத்த நிலையில், விவசாய வேலைகளை தாண்டி பல புதிய வேலைகளை உருவாக்கி உள்ளோம். அதுபோல ஏஐ தொழில்நுட்பம் மக்களின் வாழ்க்கையை எளிதாக்கும். மக்களின் வாழ்க்கையை இது எளிதாக்குவதோடு வேகமாகவும் செய்ய முடியும்.

அதே நேரத்தில் புதிய வேலை வாய்ப்புகளும் இந்த செயற்க்கை நுண்ணறிவு தொழில்நுட்பத்தால் ஏற்படும். மேலும் இதை பயன்படுத்துவது மிகவும் எளிது. இதற்கான தனியாக ஒரு கருவிகள் தேவையில்லை. ஏற்கெனவே நாம் வைத்திருக்கும் கம்ப்யூட்டர் அல்லது மொபைலை வைத்தே இந்த AI தொழில்நுட்பத்தை நாம் பயன்படுத்த முடியும்” என்று தெரிவித்தார்.

 

Exit mobile version