Site icon Tamil News

வெளிநாட்டு ஊழியர்களுக்கு நிரந்தர குடியிருப்பு வழங்க ஜப்பான் தீர்மானம்

வெளிநாட்டு ஊழியர்களுக்கு நிரந்தர குடியிருப்பு வழங்க ஜப்பான் முடிவு செய்துள்ளது.

அதன்படி, வெளிநாட்டு ஊழியர்களின் திறன்களை மேம்படுத்தும் நோக்கில், தொழில்நுட்ப வேலைவாய்ப்பு பயிற்சி திருத்தச் சட்டம் நாடாளுமன்றத்தில் நேற்று பெரும்பான்மை வாக்குகளால் நிறைவேற்றப்பட்டது.

திருத்தப்பட்ட புதிய சட்டம் 2027 முதல் ஜப்பானில் நடைமுறைக்கு வரும். வெளிநாட்டு ஊடக அறிக்கைகளின்படி, குடிவரவு கட்டுப்பாடு மற்றும் அகதிகளை அடையாளம் காணும் முந்தைய அடிப்படைகளும் திருத்தப்பட்டுள்ளன.

மூன்று ஆண்டுகளுக்குள் குறிப்பிட்ட திறமையான தொழிலாளர்களாக ஜப்பானில் பணிபுரிய வெளிநாட்டவர்களுக்கு பயிற்சி அளிப்பதே இதன் முக்கிய நோக்கமாகும்.

கட்டுமானம் மற்றும் விவசாயம் போன்ற தொழிலாளர் பற்றாக்குறை உள்ள பல துறைகள் இதில் அடங்கும். வெளிநாட்டுப் பணியாளர்களும் நிபந்தனைகளுக்கு உட்பட்டு, அதே துறையில் முதலாளிகளை மாற்ற அனுமதிக்கலாம்.

தற்போதைய சட்டங்களின்படி, வெளிநாட்டு தொழிலாளர்கள் முதலாளிகளை மாற்ற அனுமதிக்கப்படுவதில்லை.

புதிய சட்டத்தின் கீழ், ஜப்பானில் நிரந்தர வதிவிட அனுமதி பெற்ற வெளிநாட்டு தொழிலாளர்கள் அரசாங்கத்திற்கு வரி மற்றும் பிற கொடுப்பனவுகளை வேண்டுமென்றே செலுத்தத் தவறினால் அவர்களின் நிரந்தர வதிவிடத்தையும் இரத்து செய்யலாம் என தெரிவிக்கப்படுகின்றது.

 

Exit mobile version