Site icon Tamil News

மலேசியா செல்ல முயன்ற யாழ் இளைஞர் கைது!

போலி வெளிநாட்டு கடவுச்சீட்டை பயன்படுத்தி மலேசியா செல்ல முயன்ற இலங்கையர் ஒருவர் கட்டுநாயக்க விமான நிலையத்தில் கைது செய்யப்பட்டுள்ளார்.

குறித்த நபர் நாட்டை விட்டு வெளியேற தடைவிதிக்கும் நீதிமன்ற உத்தரவும் நடைமுறைப்படுத்தப்பட்டு வருகின்றது.

எனவே குறித்த நபர் தனது பயோ டேட்டாவை மாற்றி போலி வெளிநாட்டு கடவுச்சீட்டை தயார் செய்துள்ளார்.

யாழ்ப்பாணம் சண்டிலிப்பாய் பகுதியைச் சேர்ந்த 34 வயதுடைய ஒருவரே இவ்வாறு கைது செய்யப்பட்டுள்ளார். குறித்த நபர் நேற்று  (10) காலை மலேசியாவின் கோலாலம்பூருக்கு செல்லவிருந்தார்.

அனுமதி செயல்முறை முடிந்து பயணிகள் அமர்ந்திருந்தபோது, ​​அவர் சோதனைக்கு உட்படுத்தப்பட்டு கைது செய்யப்பட்டடுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.

கடந்த 2012ஆம் ஆண்டு படகு மூலம் அவுஸ்திரேலியாவுக்கு தப்பிச் செல்ல முயன்ற குற்றச்சாட்டில் கைது செய்யப்பட்ட குறித்த நபரை நாட்டை விட்டு வெளியேறுவதற்கு நீர்கொழும்பு நீதவான் நீதிமன்றம் தடைவிதித்து உத்தரவு பிறப்பித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.

Exit mobile version