Site icon Tamil News

மத்திய ஆபிரிக்க குடியரிசில் பணியில் ஈடுபட்டிருந்த இலங்கை ஹெலிகாப்டர் விபத்துக்குள்ளானதாக தகவல்!

மத்திய ஆபிரிக்க குடியரசில் அமைதி காக்கும் பணியில் ஈடுபடுத்தப்பட்ட ஹெலிகொப்டர் விபத்துக்குள்ளானதாக இலங்கை விமானப்படை தெரிவித்துள்ளது.

உள்ளூர் நேரப்படி இன்று (12ஆம் திகதி) காலை 9.30 மணியளவில் தரையிறங்கச் செல்லும் போது ஏற்பட்ட மோசமான தூசி நிறைந்த காலநிலை காரணமாக விமானம் விபத்துக்குள்ளானதாக விமானப்படை ஊடகப் பேச்சாளர் தெரிவித்துள்ளார்.

எம்ஐ 17 ரக ஹெலிகாப்டரில் ஐந்து விமானப்படை வீரர்கள் பயணித்ததாகவும், உயிர் சேதம் எதுவும் ஏற்படவில்லை என்றும் விமானப்படை பேச்சாளர் கூறினார்.

சம்பவம் தொடர்பில் விசாரணைகளை மேற்கொள்வதற்காக குழுவொன்று நியமிக்கப்பட்டுள்ளதாகவும், விமானப்படைத் தளபதியின் அறிவுறுத்தலின் பேரில் விசாரணை குழுவொன்று நியமிக்கப்பட்டுள்ளதாகவும் பேச்சாளர் குறிப்பிட்டுள்ளார்.

Exit mobile version