Site icon Tamil News

முழு பலத்துடன் ஹிஸ்புல்லா இலக்குகளை தாக்குமாறு இஸ்ரேலிய பிரதமர் உத்தரவு!

லெபனானில் உள்ள ஹிஸ்புல்லா இலக்குகளை முழு பலத்துடன் தாக்குமாறு இஸ்ரேலிய பிரதமர் பெஞ்சமின் நெதன்யாகு தனது பாதுகாப்புப் படையினருக்கு அறிவித்துள்ளதாக வெளிநாட்டு ஊடகங்கள் தெரிவிக்கின்றன.

இதற்கிடையில், அமெரிக்காவும் மற்ற நட்பு நாடுகளும் போர்நிறுத்தத்தை பரிசீலிக்க தொடர்ந்து கோரிக்கை விடுத்துள்ளன.

நேற்று (26) நடத்தப்பட்ட வான்வழித் தாக்குதல்களில் 92 பேர் உயிரிழந்துள்ளதாக லெபனான் சுகாதார அமைச்சு அறிவித்துள்ளது.

உயிரிழந்தவர்களில் ஹிஸ்புல்லாஹ் ட்ரோன் படையின் தலைவர் மொஹமட் சுரூர் என்பவரும் அடங்குவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

தெற்கு பெய்ரூட்டில் உள்ள அடுக்குமாடி குடியிருப்பு ஒன்றில் வான்வழித் தாக்குதலில் அவர் கொல்லப்பட்டதை ஹிஸ்புல்லா உறுதிப்படுத்தினார்.

கடந்த திங்கட்கிழமை முதல் தெற்கு லெபனானில் உள்ள இலக்குகள் மீது இஸ்ரேல் வான்வழித் தாக்குதல்களை முடுக்கிவிட்டுள்ளது.

இதுவரை 700க்கும் மேற்பட்டோர் உயிரிழந்துள்ளனர் மற்றும் ஏராளமானோர் காயமடைந்துள்ளனர்.

Exit mobile version