Site icon Tamil News

மேற்கு கரையில் கிராமத்தில் புகுந்து இஸ்ரேல் படையினர் தீவிர தாக்குதல்: 4 பேர் உயிரிழப்பு

மேற்கு கரையின் கபர் நிமா கிராமத்தின் அருகே முதலில் ஒரு கார் மீது இஸ்ரேல் படை அதிரடியாக தாக்குதல் நடத்தியதுடன் பின்னர் கிராமத்திற்குள் புகுந்து துப்பாக்கி சூடு நடத்தி உள்ளது.

இதில் 4 பேர் கொல்லப்பட்டதாகவும், 8 பேர் காயமடைந்ததாகவும் பாலஸ்தீன சுகாதார அமைச்சகம் தெரிவித்துள்ளது.

இதுதொடர்பாக இஸ்ரேல் எல்லை போலீஸ் தரப்பில் விளக்கம் அளிக்கப்பட்டுள்ளது. அதில், முந்தைய நாளில் நடந்த தாக்குதல் முயற்சி தொடர்பாக சந்தேக நபர்களை கைது செய்வதற்காக பாதுகாப்பு படைகள் சென்றதாகவும், அப்போது சந்தேக நபர்கள் 4 பேரும் காரில் தப்பிச் செல்ல முயன்றதால் துப்பாக்கி சூடு நடத்தப்பட்டதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. பாதுகாப்பு படையினர் மீது அவர்கள் காரை ஏற்ற முயன்றதாகவும் இஸ்ரேல் எல்லை போலீஸ் தெரிவித்துள்ளது.

Exit mobile version