Site icon Tamil News

போரில் முதல்முறையாக AI தொழில்நுட்பத்தை பயன்படுத்திய இஸ்ரேல்!

இஸ்ரேல் – ஹமாஸ் போரில் முதன் முறையாக ஏஐ தொழில்நுட்பம் பயன்படுத்தப்பட்டுள்ளதாக சர்வதேச ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.

இஸ்ரேலின் இராணுவம் காசாவில் AI- ஆல் இயக்கப்பட்ட இராணுவ தொழில்நுட்பத்தை பயன்படுத்தியதாக கூறப்படுகிறது.

இது நவீன போரில் தன்னாட்சி ஆயுதங்களைப் பயன்படுத்துவது பற்றிய அச்சத்தை எழுப்புவதாக தெரிவிக்கப்படுகிறது.

புதிய தொழில்நுட்பம் எதற்காகப் பயன்படுத்தப்படுகிறது என்பதை இராணுவம் சுட்டிக்காட்டியுள்ளது. செய்தித் தொடர்பாளர் டேனியல் ஹகாரி கடந்த மாதம் இஸ்ரேலின் படைகள் “மேலேயும் நிலத்தடியிலும் ஒரே நேரத்தில்” செயல்படுவதாகக் கூறினார்.

AI தொழில்நுட்பம் ஆளில்லா விமானங்களை அழித்து, காசாவில் உள்ள ஹமாஸின் பரந்த சுரங்கப்பாதை வலையமைப்பை வரைபடமாக்குவதாகவும், அதனை பயன்படுத்தி தாக்குதல்கள் நடத்தப்படுவதாகவும் தெரிவிக்கப்படுகிறது.

செயற்கை நுண்ணறிவால் இயங்கும் துப்பாக்கிப் பார்வைகள் மற்றும் ரோபோ டிரோன்கள் உள்ளிட்ட புதிய பாதுகாப்புத் தொழில்நுட்பங்கள் இஸ்ரேலின் தொழில்நுட்பத் துறையின் மோசமான காலகட்டத்தில் ஒரு பிரகாசமான இடத்தை உருவாக்குகின்றன என விமர்சனங்கள் முன்வைக்கப்பட்டுள்ளன.

Exit mobile version