Site icon Tamil News

ஹமாஸ் போராளிகள் பயன்படுத்திய ராக்கெட்டுகள், ட்ரோன்கள், குண்டுகள், இஸ்ரேல் பறிமுதல்

காஸாவில் ஹமாஸ் போராளிகள் பயன்படுத்திய பிரமாண்டமான ராக்கெட் குண்டுகளை இஸ்ரேலிய ராணுவத்தினர் கைப்பற்றியுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

இதுகுறித்து விடுக்கப்பட்டுள்ள அறிக்கையில், இந்த விடயம் தெரியவந்துள்ளது.

ஹமாஸ் அமைப்பினர் பொதுமக்களை மனிதக் கேடயங்களாக பயன்படுத்தியதற்கான ஆதாரங்கள் இருப்பதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

மேலும் காஸாவில் ஹமாஸ் போராளிகளின் மிகப் பெரும் ஆயுதக்கிடங்கை கண்டுபிடித்துள்ளதாகவும், அதில் ராக்கெட் குண்டுகள், ஏவுகணைகள், கையெறி குண்டுகள், ட்ரோன்கள் மற்றும் பிற ஆயுதங்களைக் கைப்பற்றியதாகக் கூறப்பட்டுள்ளது.

இந்த ஆயுதங்கள் மருத்துவமனை மற்றும் பள்ளிக்கு அருகில் கண்டுபிடிக்கப்பட்டுள்ளதாகவும் அந்த அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

Exit mobile version