Site icon Tamil News

காஸா பகுதியில் பாரிய நில ஆக்கிரமிப்புக்கு தயாராகும் இஸ்ரேல்

காஸா பகுதியில் பாரிய நில ஆக்கிரமிப்புக்கு இஸ்ரேல் தயாராகி வருவதாக வெளிநாட்டு ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.

காஸாவில் உள்ள இலங்கையர்களும் வெளிநாட்டவர்களும் இதுவரை அகற்றப்படாத பின்னணியிலேயே இவ்வாறான தகவல்கள் வெளியாகியுள்ளன.

இதேவேளை, இஸ்ரேலுக்கும் ஹமாஸுக்கும் இடையில் இடம்பெற்ற மோதலில் உயிரிழந்த அனுல ரத்நாயக்க ஜயதிலகவின் சடலம் உடனடியாக இலங்கைக்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளதாக இஸ்ரேலுக்கான இலங்கைத் தூதுவர் நிமல் பண்டார தெரிவித்துள்ளார்.

சடலத்தை இலங்கைக்கு கொண்டு வருவதற்கு சம்பந்தப்பட்ட விமான நிறுவனத்திடம் ஒப்படைக்கப்பட்டுள்ளதாக குறிப்பிட்டார்.

சமய நிகழ்வுகளின் பின்னர் அது தொடர்பான ஆவணங்கள் தயாரிக்கும் பணிகள் நிறைவடைந்துள்ளதாக இஸ்ரேலுக்கான இலங்கைத் தூதுவர் நிமல் பண்டார தெரிவித்துள்ளார்.

அதன்படி, விமானம் மூலம் அவரது உடல் இலங்கைக்கு கொண்டு வரப்படும். எனினும் இஸ்ரேலில் இருந்து வரும் விமானங்கள் வருவதில் தாமதம் ஏற்பட்டுள்ளதாக இஸ்ரேலுக்கான இலங்கை தூதுவர் நிமல் பண்டார மேலும் தெரிவித்துள்ளார்.

Exit mobile version